அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சொந்த செலவில் அரிசிப் பை வழங்கி உதவிய ஆசிரியர்கள்…!
புதுக்கோட்டை,ஜூன் 8: அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தம் சொந்த சொந்த செலவில் அரிசிப் பை வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்களை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் பாட்னாபட்டி ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் அமலான ஊரடங்கின் காரணமாக வீடுகளிலேயே முடங்கிப் போயிருந்தனர். எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படும் துயர் துடைக்க அப்பள்ளி ஆசிரியர்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர்.
பின்னர் பள்ளி தலைமையாசிரியர் ம. ஜார்ஜ் குஞ்சுமணி மற்றும் இரு உதவி ஆசிரியர்கள் இரா. ஜேம்ஸ்மேரி, ஆ. இராமசாமி ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் 73 மாணவர்கள் மற்றும் இந்த ஆண்டு பள்ளியில் முதல் வகுப்பில் சேர தகுதியுடைய 14 குழந்தைகள் என மொத்தம் 87 குழந்தைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசிப்பை வீதம் ரூ 40 ஆயிரம் மதிப்பிலான அரிசிப் பைகளை வழங்கினார்கள். ஆசிரியர்களி்ன் மனித நேய செயலுக்கு மாணவர்களும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்..
செய்தி புதுகை நிருபர்.